அஷ்ட கந்தம் - Astakandham.
Delivery Options
Get delivery at your doorstep
நாம் மறந்து போன தெய்வீக ஆன்மீக வாசனை கலவை தான் அஷ்ட கந்தம்.
பலருக்கும் தசாங்கம் பற்றி தெரிந்திருக்கும். ஒரு சிலருக்கு அரகஜா பற்றியும் தெரிந்திருக்கும். ஆனால் அஷ்டகந்தம் பற்றி தெரிந்தவர்கள் மிக குறைவு.
அஷ்டகந்தம் என்பது எட்டு வகையான நறுமணப் பொருட்கள் (கந்தங்கள்) கலந்த ஒரு புனித கலவையாகும். இது தெய்வீக பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆன்மீக சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. நெற்றியில் பொட்டாகவும் வைத்துக் கொள்ளலாம். சிலைகள் மற்றும் படங்களுக்கு பொட்டு வைக்கவும் பயன்படுத்தலாம். இது செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கவும், எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும் உதவுகிறது.
(1)கோரோசனை,
(2) சந்தனம்,
(3)தேவதாரு,
(4)பச்சைக் கற்பூரம்,
(5) அகில்,
(6) புனுகு
(7)கஸ்தூரீ,
(8)குங்குமப்பூ
மேற்கண்ட எட்டு பொருள்களை கலந்து தயாரிப்பது அஷ்டகந்தம் எனப்படும்.
அஷ்ட - எட்டு
கந்தம் - நறுமணப்பொருள்
அஷ்டகந்தம் என்பது மங்கலப்பூச்சுகளில் முதன்மையானது என்கிறது அகத்தியர் சித்தசூத்திரம் நூலில். தினமும் காலை மாலை சுத்த மனதோடு நெற்றியில் இட்டுக்கொண்டால் சகல வசியம் உண்டாகி அதனால் நம்மை பீடித்திருக்கும் தீயவைகள் விலகி அனைத்து வகையான நன்மைகளும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
.
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

